தமிழக செய்திகள்

'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தின் 10 நகரங்களில் நடைபெற்று வரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "தமிழகத்தில் 10 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதினால், டெண்டர் எடுத்த குத்தகைதாரர்கள் பணிகளை தொடர்ந்து செய்யாததால், அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக டெண்டர் எடுத்த குத்தகைதாரர்களை அழைத்து பணிகளை தொடருங்கள் என்று அவர்களிடம் அறிவுறுத்திய பிறகு, தற்போது பணிகள் ஒவ்வொரு இடமாக முடிக்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே எந்தெந்த இடங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து அந்த இடங்களில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு விரைவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முடிக்கப்படும்" என்று கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்