தமிழக செய்திகள்

நன்னிலம் பகுதியில் பனி மூட்டம்

நன்னிலம் பகுதியில் பனி மூட்டம் காண்பட்டது.

தினத்தந்தி

மார்கழி, தை மாதத்தில் தான் பனிமூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது ஐப்பசி மாதத்தில் நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இந்த பனிமூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். அதேபோல் திருமக்கோட்டை, தென்பரை, பாளையக்கோட்டை, இளவனூர், கன்னியாகுறிச்சி, ராதாநரசிம்மபுரம், மேலநத்தம், கோவிந்தநத்தம் உள்ளிட்ட பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து