தமிழக செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 612 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 612 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கிய இந்த திட்டம் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று 645 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 563 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்த வகையில் 20 ஆயிரத்து 57 பேர் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 506 பேர் கோவேக்சின் தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர். அதில் 15 ஆயிரத்து 149 பேர் முதல் முறையாகவும், 5 ஆயிரத்து 414 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 612 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 352 பேர் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 7 ஆயிரத்து 260 பேர் கோவேக்சின் தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 39 ஆயிரத்து 631 பேர் முதல் முறையாகவும், 30 ஆயிரத்து 981 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்