கோவை,
கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி என்பவர், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் முதல்-அமைச்சர் விஜய்க்கு காது கேட்கும் கருவியையும், ஒரு கடிதத்தையும் தபால் மூலம் அனுப்பினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்களுக்கு குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது முதல்-அமைச்சரான பிறகு குழந்தைகள், பெண்கள் மற்றும் பெற்றோரின் வேதனை குரல்கள் கூட அவருக்கு கேட்பதில்லை.
இதனால் முதல்-அமைச்சர் விஜய்க்கு காது கேட்கும் கருவி அனுப்பப்பட்டுள்ளது. அவர் மக்களின் பிரச்சினைகளுக்கு செவி சாய்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.