தமிழக செய்திகள்

உயர்மட்ட சாலை அமைக்க மண் பரிசோதனை

உயர்மட்ட சாலை அமைக்க மண் பரிசோதனை செய்யப்பட்டது.

தினத்தந்தி

திருச்சி:

திருச்சி மாநகரில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மாநகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாநகரை ஒட்டிய நெரிசலுள்ள பகுதிகளில் உயர்மட்ட சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து ஓடத்துறை காவிரி பாலத்தில் இருந்து சிந்தாமணி அண்ணாசிலை, குடமுருட்டி சோதனைச்சாவடி வழியாக மல்லாச்சிபுரம் வரை சுமார் ரூ.400 கோடி மதிப்பில் 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு 2 இடங்களில் உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக சத்திரம் பஸ் நிலையம் அருகே நேற்று மண் பரிசோதனை நடைபெற்றது. விரைவில் அடுத்த கட்ட பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்