தமிழக செய்திகள்

சோலைமலை முருகன் கோவிலில்புளியோதரை பிரசாதம் தயாரிக்க நவீன எந்திரம்

சோலைமலை முருகன் கோவிலில் புளியோதரை பிரசாதம் தயாரிக்க நவீன எந்திரம் நிறுவப்பட்டுள்ளது

தினத்தந்தி

அழகர்கோவில்

அழகர்மலை உச்சியில் முருகப் பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் உள்ளது. இக்கோவிலில் லட்டு, முறுக்கு, அதிரசம், வடை, உள்ளிட்ட புளியோதரை, சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்கள் தினமும் பக்தர்களின் தேவையையொட்டி தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் பக்தர்கள் விரும்பி வாங்கும் புளியோதரை பிரசாதம் செய்ய நவீன கலவை எந்திரம் மூலம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் அழகர் கோவில் மற்றும் சோலைமலை முருகன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஏற்கனவே பஞ்சாமிர்தம் தயாரிக்கும் எந்திரம் நிறுவப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது பக்தர்கள் அதிகம் வாங்கும் புளியோதரை பிரசாதம் தயாரிக்கவும் நவீன எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் ஒரே முறையில் 16 கிலோ வரை புளியோதரை பிரசாதம் சமைக்கலாம். பக்தர்களின் வருகைக்கு ஏற்பவும், திருவிழா காலங்களிலும் உடனுக்குடன் கூடுதலாக புளியோதரை பிரசாதம் தயார் செய்யும் வகையில் இந்த எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்