தமிழக செய்திகள்

விரைவில் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை - செந்தில் பாலாஜி

தமிழகத்தில் விரைவில் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தில் உள்ள 56,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகளில் மின் அளவீடு பதிவு செய்யும் பணியிலும் 5 சதவீத காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டவுடன், மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நேற்று கூறினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தன்னுடைய சொந்த தொகுதிகளாகக் கருதியே திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்றும் முதல்-அமைச்சராக பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றியுள்ளார் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை