தமிழக செய்திகள்

பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

வரகூர் கிராமத்தில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த வரகூர் கிராமத்தில் இரண்டாம் சனிக்கிழமையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத கருணாகடாஷ பெருமாளுக்கு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்