தமிழக செய்திகள்

சிறப்பு கிராம சபை கூட்டம்

வாய்மேடு, பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சிகளில்சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இந்திரா வீராசாமி முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரியாசிவசங்கர், ராமநாதன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான பொதுப்பணிகள் தேர்வு, கிராம வளர்ச்சி திட்டம், நோயற்ற ஊராட்சி, வாழ்வாதாரம் நிறைந்த வறுமையற்ற ஊராட்சி, உள்ளிட்ட திட்டம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதே போல வாய்மேட்டில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார். தகட்டூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். . முடிவில் ஊராட்சி செயலாளர் அன்புராஜ் நன்றி கூறினார்.தாணிக்கோட்டகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு