தமிழக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்து எழுந்த தினமான இந்த பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு புதிய ஒளியை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு, சிறப்பு பாடல், திருப்பலி நடைபெற்றது. நேற்று காலை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பெரம்பலூர் புனித பனிமய மாதா தேவாலயத்தில், பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் தலைமையில் சிறப்புப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பாளையம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், திருவாலந்துறை, திருமாந்துறை, செட்டிகுளம், பாடாலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், அந்தந்த பங்கு பாதிரியார் தலைமையில் ஈஸ்டர் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.

இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு