தமிழக செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய கைத்தறி தின விழாவினையொட்டி கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர் கைத்தறி அலுவலக வளாகத்தில் நேற்று தேசிய கைத்தறி தின விழா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து காமாட்சி அம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் விற்பனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியை பார்வையிட்டு, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த மருத்துவ முகாம்களில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்து பயன்பெற்றனர்.

இந்த விழாவில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்பட அரசு அலுவலர்கள், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து