தமிழக செய்திகள்

நவராத்திரியையொட்டி ஓசூர் சோமேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை

நவராத்திரியையொட்டி ஓசூர் சோமேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

தினத்தந்தி

ஓசூர்

ஓசூர் நெசவுத்தெருவில் உள்ள சோமேஸ்வர சாமி கோவிலில் நவராத்திரி விழா கொண்டாப்பட்டது. இதையொட்டி தினமும் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று விஜயதசமியையொட்டி விநாயகர், சோமேஸ்வர சாமி, அம்மன், முருகன், துர்க்கையம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக விநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலில், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் வீர சைவ லிங்காயத்து சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்