தமிழக செய்திகள்

பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் ராமநாராயண பெருமாள் கோவிலில் உள்ள சீதாதேவி, லட்சுமணர் சமேத ராம நாராயண பெருமாளுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமநாராயண பெருமாள் பக்தர்களுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். பெருமாளுக்கு மங்கல ஆரத்தி உள்ளிட்ட உபச்சாரங்கள் நடைபெற்றன.

அதுபோல் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வரதராஜ பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார். பெருமாளுக்கு வேத மந்திரங்கள் முழங்க மங்கல ஆரத்தி, மகா தீபாராதனை நடைபெற்றது. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு