சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;
இதேபோல் பயணிகளின் வசதிக்காக திருச்சி வழியாக தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நெல்லையில் இருந்து வருகிற 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணி அளவில் தாம்பரத்திற்கு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06070) இயக்கப்படுகிறது.
அதே போல, தாம்பரத்தில் இருந்து வருகிற 14, 21, 28 ஆகிய தேதிகளில் மதியம் 1.55 மணிக்கு நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06069) இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.