சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க விசாகப்பட்டிணம்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி, விசாகப்பட்டிணத்தில் இருந்து வருகிற 22 மற்றம் 29 ஆகிய தேதிகளில் எஸ்.எம்.வி.டி.பெங்களூருவிற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-08581) இயக்கப்படுகிறது.
அதே போல, எஸ்.எம்.வி.டி.பெங்களூருவில் இருந்து வருகிற 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விசாகப்பட்டிணத்திற்கும் சிறப்பு ரெயில் (08582) இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.