தமிழக செய்திகள்

சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு யாகம்

சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அன்பு மாடல்நகரில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சாய்பாபாவிற்கும் உற்சவருக்கும் சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. மேலும் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகமும் நடைபெற்றது. முன்னதாக வண்ண மலர்களால் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு உற்சவருக்கும், மூலவருக்கும் பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.