தமிழக செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது.

தினத்தந்தி

கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் மாணவிகள் அனு, சண்முகப்பிரியா ஆயிஷா அஜிபா ஆகியோர் முறையே முதல் 3 பரிசுகளை பெற்றனர். போட்டி நடுவர்களாக கல்லூரி கல்வி இணை இயக்குனரால் தேர்வுசெய்யப்பட்ட தமிழ்த்துறை இணை பேராசிரியர்கள் பணிபுரிந்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது என தமிழ் வளர்ச்சி துறை, உதவி இயக்குனர் ஜோதி தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து