தமிழக செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி

வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.

தினத்தந்தி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் 10 பள்ளிகளை சேர்ந்த 24 மாணவர்கள் கலந்து கொண்டு கலைஞரும் தமிழும் என்ற தலைப்பில் பேசினர்.

வேலூர் தனலட்சுமி தஞ்சாவூர் ஓவிய கலைக்கூடம் நிறுவனர் செல்வகணேஷ், ஊரிசு கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் திருஇன்பஎழிலன், குண்ராணி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப்அன்னையா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசளிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் செய்திருந்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்