தமிழக செய்திகள்

மாநில ஐவர் கால்பந்து போட்டி

மாநில ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

தினத்தந்தி

காரைக்குடி

காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சியில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யாசெந்தில்நாதன் முன்னிலை வகித்தார். 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 50 அணிகள் கலந்துகொண்டன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இறுதிபோட்டியில் காரைக்குடி தெற்குத்தெரு மற்றும் கீழத்தெரு அணிகள் மோதியது. இதில் கீழத்தெரு அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு ரொக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், தேவிமீனாள், சமூக ஆர்வலர் புதுமை மகேந்திரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் திவாகர் செய்திருந்தார். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு