தமிழக செய்திகள்

அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

சிதம்பரம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

அண்ணாமலை நகர், 

மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை மயிலாடுதுறை அருகே ராமாபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 52) என்பவர் ஓட்டினார். சிதம்பரம் அருகே வேளக்குடி பழைய கொள்ளிடம் பாலத்தில் சென்றபோது, மர்மநபர்கள் திடீரென அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இருப்பினும் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை