தமிழக செய்திகள்

திருப்பத்தூர்: 3 வயது சிறுவனை கடித்துக்குதறிய தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் தெருநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தினத்தந்தி

தமிழகத்தில் தெருநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே திரியாலம் பகுதியை சேர்ந்த 3 வயது மோசிக்கிரன் இன்று வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, சிறுவன் மோசிக்கிரனை தெருநாய் கடித்துக்குதறியது. இந்த சம்பவத்தில் சிறுவன் படுகாயமடைந்தா. சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து