தமிழக செய்திகள்

மதுபான பார்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

சென்னை.

தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் மதுபான பார்கள் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்டதாக 4 மதுபான பார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபேன்ற தொடர் நடவடிக்கை எடுக்க கலால் துறை, பேலீஸ் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது'' எனறு கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து