தமிழக செய்திகள்

விவசாயி வீட்டில் பணம் திருடிய கல்லூரி மாணவர் கைது

நாகரசம்பட்டியில் விவசாயி வீட்டில் பணம் திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே நாகரசம்பட்டி பூசாரி தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 51). விவசாயி. இவர் வெளியே சென்றிருந்தபோது வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர் வீட்டில் பூஜை அறையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை திருடினார். அப்போது வீட்டுக்கு வந்த பழனி அந்த வாலிபரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் அவரை நாகரசம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் நாகரசம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுமன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து