தமிழக செய்திகள்

பாகலூர் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

பாகலூர் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

தினத்தந்தி

ஓசூர்:

பாகலூர் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலியானார்.

பள்ளி மாணவர்

ஓசூர் அருகே பாகலூர் கோட்டை பகுதியை சேர்ந்தவர் லதா. இவருடைய மகன் கிரிஷ் (வயது 10). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று அந்த மாணவன் மேல் சூடாபுரம் பகுதியில் உள்ள சின்ன ஏரியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். சிறுவனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பதாக கூறப்படுறது.

விசாரணை

கிரிஷின் உடல் ஏரியில் மிதப்பதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள், பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்