தமிழக செய்திகள்

புதுச்சத்திரம் அருகே நீரில் மூழ்கி மாணவி பலி

புதுச்சத்திரம் அருகே நீரில் மூழ்கி மாணவி உயிரிழந்தாள்.

தினத்தந்தி

சிதம்பரம்,

புதுச்சத்திரம் அருகே உள்ள கீழ்பூவாணிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் அஞ்சலி (வயது 12). இவள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று மாணவி, அதே பகுதியில் உள்ள பெருமாள் ஏரி வடிகால் வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றாள். அப்போது அவள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாள். இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்