தமிழக செய்திகள்

கிணற்றில் மூழ்கி மாணவி பலி

ஊத்தங்கரை அருகே கிணற்றில் மூழ்கி மாணவி பலியானார்.

தினத்தந்தி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா கல்லாவியை அடுத்த ஆனந்தூர் அருகே கொல்லப்பட்டியை சேர்ந்த முருகன் மகள் பூர்ணிமா (வயது 13). இவர் ஆனந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கொல்லப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக நேற்று முன்தினம் சென்றார். அந்த நேரம் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதில் சிறுமி பூர்ணிமா பலியானார். தகவல் அறிந்த கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து