தமிழக செய்திகள்

இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு

பரமத்தி வேலூரில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு செய்தனர்.

தினத்தந்தி

பரமத்திவேலூர்

உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத் துறை ஆணையா உத்திரவின் பேரில், பரமத்தி வேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவயற்றை உணவுப் பாதுகாப்பு அலுவலா செல்வகுமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பருவநிலை மாற்றத்தினால் வடிக்கையாளாகளுக்கு புளு போன்ற வைரஸ் காய்ச்சல், குடிநீர் மற்றும் மீன் உணவுகள் மூலம் தற்போது பரவி வருவதால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளாகளுக்கு வழங்க அறிவுரை வழங்கினார். பழைய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பொறிப்பதற்கு பயன்படுத்திய இரண்டு கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 4 லிட்டர் பழைய எண்ணெய் கைப்பற்றப்பட்டு மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் திட்டத்திற்கு வழங்கப்பட்டது. மழைக்காலம் முடியும் வரை தொடர் ஆய்வுகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்