தமிழக செய்திகள்

ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் திடீர் மழை

ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் திடீர் மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. சுற்றி உள்ள பல பகுதிகளிலும் மழை பெய்தாலும் ஈரோட்டில் மழை துளிகள் விழாத நிலையே இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் திடீர் மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் வலுத்து பெய்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பி.பி.அக்ரஹாரத்தில் உள்ள கருங்கல்பாளையம் போலீஸ் நிலையம் முன்பு சாக்கடை நிரம்பி சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்தது. பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் என்று கழிவுகள் சாலையை நிரப்பின. இந்த மழையின் பாதிப்பு சூளை மற்றும் சுற்றிலும் சில பகுதிகளில் இருந்தது. இதனால் அந்த பகுதிகளில் நேற்று வெப்பம் நீங்கி குளிர் காற்று வீசியது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பி.பி.அக்ரஹாரம் வந்ததை முன்னிட்டு மழை பெய்ததால், அவரை வரவேற்கும் வகையில் மழை பெய்தது என்று தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு