தமிழக செய்திகள்

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி திடீர் நிறுத்தம்

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டதால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 4 அணு உலைகள் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் 2-வது அணு உலையில் டர்பைனில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மாலை 4.45 மணியளவில் அந்த அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் டர்பைனில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்தது.

தற்போது முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை