தமிழக செய்திகள்

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

வால்வு பகுதியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகள் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த மே மாதம் 13-ந் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.அந்த பணிகள் நிறைவு பெற்று நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 360 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், மின் உற்பத்தி தொடங்கப்பட்ட சில மணி நேரத்தில் வால்வு பகுதியில் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுது நீக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நாட்களில் பழுதை நீக்கி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து