தமிழக செய்திகள்

முட்களை போட்டு பாதை அடைப்பு; 2 குடும்பத்தினர் அவதி

பாலக்கோடு அருகே முட்களை போட்டு பாதை அடைக்கப்பட்டதால் 2 குடும்பத்தினர் அவதி.

தினத்தந்தி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே கோயிலூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்கர் (வயது40), ஆனந்தன் (42). கூலித்தொழிலாளிகள். இவர்கள் 4 தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த நத்தம் புறம்போக்கில் உள்ள பாதையை அதேபகுதியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொந்தம் என கூறி முட்களை போட்டு அடைத்துவிட்டனர். இதனால் 2 பேரின் குடும்பத்தினர் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக 2 குடும்பத்தினரும் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து