தமிழக செய்திகள்

ஓசூர் அருகேவிவசாயி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி

ஓசூர்:

ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 54). விவசாயி இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த 7-ந் தேதி முனிராஜ் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்தார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் தட்டி கேட்டதால் மனவேதனையில் விஷம் குடித்தார். குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனிராஜ் இறந்தார் இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை