தமிழக செய்திகள்

பாகலூர் அருகேவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ஓசூர்:

பாகலூர் அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. இதற்காக அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லையாம். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT