ஈரோடு,
கோடை விடுமுறையையொட்டி ரெயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி போத்தனூரில் இருந்து ஈரோடு வழியாக மேற்கு வங்க மாநிலம் காரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06065) நாளை (சனிக்கிழமை), 30, 6-ந்தேதிகளில் இரவு 11 மணிக்கு இயக்கப்படுகிறது.
மேலும் மேற்கு வங்க மாநிலம் காரக்பூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் (வண்டி எண்-06066) 25, 1, 8-ந்தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த தகவல் சேலம் கோட்ட ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.