தமிழக செய்திகள்

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுறுத்தல்

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா மாதத்திற்கான குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற கலந்தாய்வு செய்தும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் காவல்துறையின் வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன் (தலைமையிடம்), வேலுமணி (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிசாமி (பெரம்பலூர் உட்கோட்டம்), சீராளன் (மங்களமேடு உட்கோட்டம்), தங்கவேல் (மாவட்ட குற்றப்பிரிவு), சோமசுந்தரம் (ஆயுதப்படை) மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு