தமிழக செய்திகள்

நடத்தையில் சந்தேகம் - மனைவியை வெட்டி கொன்ற கணவன்

விழுப்புரம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சிங்கனூரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி செல்வி (வயது 55). ஏழுமலை தனது மனைவியன் நடத்தையில் சந்தேகப்பட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று ஆத்திரம் அடைந்த ஏழுமலை கொடுவா கத்தியை கொண்டு மனைவி செல்வியை சரமாறியாக வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த போலீசார் ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் மனைவியை கொலைசெய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு