தமிழக செய்திகள்

ஆத்தூர் அருகே தனியார் வங்கி ஊழியர் ஏரியில் மர்மச்சாவு-போலீசார் விசாரணை

ஆத்தூர் அருகே தனியார் வங்கி ஊழியர் ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தினத்தந்தி

ஆத்தூர்:

தனியார் வங்கி ஊழியர்

ஆத்தூர் அருகே நடுவலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த செந்தில் மகன் சுரேஷ் (வயது 20), இவர், தனியார் வங்கியில் ஊழியராக இருந்தார். இவர், ஆத்தூரில் இருந்து மஞ்சினி செல்லும் வழியில் துலுக்கனூர் ஏரி கரையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து கிடந்த அருகில் ரத்தக்கறை இருந்தது.

தகவல் அறிந்த ஆத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணை

சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சுரேஷ் இறப்பு குறித்து போலீசார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் அவர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்