தமிழக செய்திகள்

ஜன்னல் வழியாக சாவியை எடுத்து கதவை திறந்து கைவரிசை: வீடு புகுந்து 20 பவுன் தங்க நகைகள் திருட்டு

சென்னை கொளத்தூரில் ஜன்னல் வழியாக சாவியை எடுத்து கதவை திறந்து வீடு புகுந்து 20 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

தினத்தந்தி

சென்னை கொளத்தூர் ராஜன் நகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 63). இவர், சென்னை பட்டரவாக்கத்தில் இரும்பு பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவர், தன்னுடைய மகள் சங்கீதா(30), பேத்தி ஹர்ஷிதா(11) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு சாவியை அறையில் வைத்து விட்டு படுக்கை அறையில் சென்று தூங்கி விட்டனர். நள்ளிரவில் மர்ம ஆசாமி, ஜன்னல் வழியாக இரும்பு கம்பியால் சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் பீரோவை திறந்து அதில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று விட்டார். இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை