தமிழக செய்திகள்

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு

திருத்துறைப்பூண்டியில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு

தினத்தந்தி

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்த தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வை ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர். தமிழ் மொழி இலக்கிய திறனாய்வை பள்ளி மாணவ-மாணவிகள் மேம்படுத்தி கொள்ளும் வகையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு, தேர்வுகள் இயக்ககம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2023-24-ம் ஆண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடந்தது. இத்தேர்வானது திருத்துறைப்பூண்டியில் 2 தேர்வு மையங்களிலும், முத்துப்பேட்டையில் ஒரு தேர்வு மையத்திலும் நடந்தது. இந்த தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இதேபோல் இத்தேர்வானது திருவாரூர் மாவட்டம் முழுவதும் 15 மையங்களில் நடந்தது. இத்தேர்வை 5 ஆயிரத்து 332 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் 1500 மாணவ-மாணவிகள் பள்ளிக்கல்வித்துறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் தலா ரூ.1500 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்