தமிழக செய்திகள்

3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 1. தூத்துக்குடி எஸ்.பி. சிலம்பரசன், சென்னை சட்டம் ஒழுங்கு ஏஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. நெல்லை மேற்கு காவல் துணை ஆணையர் மதன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் விஜயகுமார், நெல்லை மேற்கு காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT