தமிழக செய்திகள்

மின்கட்டண உயர்வு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

மின்கட்டண உயர்வு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார்.

தினத்தந்தி

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். ஆனால் ஆட்சி அமைத்த பிறகு அதை செய்யவில்லை. பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம், கூட்டணியில் உள்ள புதுச்சேரியில் குறைத்துள்ளனர். தமிழகத்தில் ஏன் குறைக்க முடிய வில்லை என்பதே மக்களின் கேள்வி.

மின் கட்டணத்தை உயர்த்த, மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக கூறுவது பொய். உலகதத்தில் பொய் சொல்வதில் தி.மு.க. அமைச்சர்கள் தான் முதலிடம் பெறுவார்கள்.

மத்திய அரசு தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த சொல்ல வில்லை. தனியார் நிறுவனத்தை ஆதரிப்பதற்காக கட்டணத்தை மாநில அரசே உயர்த்தி உள்ளது. மின் வாரியம் நஷ்டத்தில் இயங்கியதால் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றால், அதுதொடர்பான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டு, மக்கள் மத்தியில் கணக்குகளை காண்பிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்