தமிழக செய்திகள்

31-ந்தேதி பிரமாண்ட விழா: தமிழக போலீசாருக்கு ஜனாதிபதியின் கவுரவ கொடி

தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்குகிறார்

தினத்தந்தி

சென்னை:

தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழகம் தான்.

தமிழக போலீசாருக்கு ஜனாதிபதியின் சிறப்பு கவுரவ கொடி வழங்கும் விழா வருகிற 22-ந்தேதி சென்னையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருந்தது. தற்போது வருகிற 31-ந்தேதியன்று தமிழக போலீசாருக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கும் விழா, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்த விழாவில் கலந்துகொண்டு, ஜனாதிபதியின் சிறப்பு கவுரவ கொடியை தமிழக போலீசாருக்கு வழங்க உள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது. விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை