தமிழக செய்திகள்

தமிழகத்துக்கு கூடுதலாக 1.69 லட்சம் ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் வந்தன

தமிழகத்துக்கு கூடுதலாக 1.69 லட்சம் ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்தது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கடந்த 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்படி கோவிஷீல்டு' மற்றும் கோவேக்சின்' தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

முன்னதாக தமிழகத்துக்கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 கோவிஷீல்டு' தடுப்பூசிகளும், 20 ஆயிரம் கோவேக்சின்' தடுப்பூசிகளும் மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதையடுத்து சில நாட்கள் கழித்து 2-வது கட்டமாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோவிஷீல்டு' தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மேலும் கூடுதலாக 1 லட்சத்து 69 ஆயிரத்து 920 கோவேக்சின்' தடுப்பூசிகள் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்தது. அந்த தடுப்பூசிகள் அனைத்தும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில நடமாடும் மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை