தமிழக செய்திகள்

சுற்றுலா துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சுற்றுலா துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை தீவுக்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார். இந்த பொருட்காட்சியில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து விளக்கும் அரசு அரங்குகள், 100-க்கும் மேற்பட்ட வணிக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுலா துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சுற்றுலா பொருட்காட்சி இன்னும் 70 நாட்கள் நடைபெறும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு