தமிழக செய்திகள்

தமிழ் வழியில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை

பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்கலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு காமராஜர் விருது அவரது பிறந்தநாளில் வழங்கப்படும். 32 மாவட்டங்களை சேர்ந்த 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்

10, +2 மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும். அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள்.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு