தமிழக செய்திகள்

தஞ்சை : பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்

தஞ்சையில் முதன்மை கல்வி அதிகாரிக்கு எதிராக விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த கூடிய பணி இன்று தொடங்கிய நிலையில், தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய கல்வி மாவட்டங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தஞ்சையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வந்த முதன்மை கல்வி அதிகாரி ஆசிரியர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

முதன்மை கல்வி அதிகாரி ஆசிரியர்களை ஒருமையில் திட்டியது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். முதன்மை கல்வி அதிகாரி நேரில் வந்து ஆசிரியர்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்