தமிழக செய்திகள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்

தினத்தந்தி

மகாளய அமாவாசையையொட்டி குற்றாலத்தில் திரளானவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

நேற்று மகாளய அமாவாசையையெட்டி புனித தலங்களில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவிக்கரையில் நேற்று காலை முதல் திரளானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மெயின் அருவியில் தற்போது குறைவான அளவு தண்ணீர் வருகிறது. அதில் குளித்துவிட்டு புரோகிதர்களிடம் தர்ப்பணம் கொடுத்தனர்.

தற்போது சீசன் முடிந்த நிலையில் அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் குறைவான அளவில் இங்கு வந்து குளித்து செல்கிறார்கள். நேற்று அமாவாசையை முன்னிட்டு அதிக அளவில் அருவிகளில் குளித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு