கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை

தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,000க்கும் அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு அந்த மாவட்டங்களுக்கான தளர்வுகள், இதர மாவட்டங்களுக்கான தளர்வுகள் என பிரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டார். பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் பொதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் தேநீர் கடைகள் மற்றும் சலூன்கள் திறக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்