தமிழக செய்திகள்

டாஸ்மாக் மூடல்: தஞ்சாவூரில் இருந்து அரியலூருக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள்...!

தஞ்சாவூரில் டாஸ்மாக்கடைகள் அடைக்கப்பட்டுதால் அங்கிருந்து அரியலூருக்கு மதுப்பிரியர்கள் படையெடுத்து மது வாங்கி செல்கின்றனர்.

தினத்தந்தி

அரியலூர்,

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக, அரசின் வழிகாட்டுதலின்படி ஊரடங்கு மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1-ல் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் இந்த மாவட்டங்களில் டாஸ்மாக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கடைகள் அடைக்கப்பட்டுதால் திருச்சி, அரியலூர் எல்லைகளில் உள்ள மதுக்கடைக்களுக்கு மதுப்பிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் படையெடுத்து வருகை புரிகின்றனர். காலை முதல் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

தஞ்சாவூரில் இருந்து மதுவாங்க வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்கானித்து வருகின்றனர். முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே மதுபாட்டில் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்