தமிழக செய்திகள்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தஞ்சை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளையராஜா, அமைப்பு செயலாளர் தமிழ்மாறன், மகளிர் அணி செயலாளர் வேதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு வேண்டும். காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணி இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும். பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில செயலாளர் ராஜா, தஞ்சை கல்வி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்